ஒமைக்ரான் தொற்று 2 மடங்கு வேகமாக பரவும் என்பதால், கொரோனா தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. தேசிய சராசரியை விட குறைவாக உள்ள மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தி, 100% தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.