இந்தியாவில் சுமார் 16 கோடி பேருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாகவும், அதில் 7.5% பேர் பெண்கள் என்றும் யுபிஎஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தனிநபர் ஆல்கஹால் நுகர்வில், ஆசிய (6.4 லிட்டர்), உலக (6.2 லிட்டர்) சராசரிகளை ஒப்பிடும்போது இந்தியாவில் (5.5 லிட்டர்) குறைவாக உள்ளது. கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் தான் பெண்கள் மது அருந்துவது அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.