திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் பழனி குளத்து ரவுண்டானாவில் உள்ள வேல் சிலையை உடைத்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த நிலையில் , வேல் உடைக்கப்பட்டதை அடுத்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். குறிப்பாக தைப்ப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்காலங்களிலும், பக்தர்கள் கூட்டம் ஆயிரம் மடங்கு அதிகரித்துக்காணப்படும். தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் பழனியிலும் மலைக் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம்ம் அதிகரித்துள்ளது. நகரின் பல்வேறு இடங்களில் வாகன நெருக்கத்துடன் காணப்படுகிறது.
பழனியில் வேல்சிலை
வருகை தரும் பக்தர்களை கவரும் வகையில், பழனி கோவில் நிர்வாகம் சார்பில் தங்கும் விடுதியில் செப்ஃபி பாய்ண்டும், பழனி பேருந்துநிலையம் அருகே குளத்துரோடு ரவுண்டானாவில் பளிங்கு கற்களால் ஆன வேல் சிலை வைக்கப்பட்டுஉள்ளது. இதற்கு தினமும் பக்தர்கள் மாலை அணிவிப்பர். மேலும் பழனியின் அடையாளமாகவும் இது விளங்குகிறது.
வேல் சிலையை உடைத்த மர்மநபர்
இந்து அமைப்பினர் போரட்டம்
இதற்கிடையே வேல் சிலை உடைக்கப்பட்ட தகவல் காட்டுத்தீ போல் பரவியதையடுத்து இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் சிலையை உடைத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக சிலையை நிறுவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.