கர்நாடகாவில் மாணவர்களிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்தால் பள்ளிகள் மூடப்படும் என அம்மாநில அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா நிலை குழந்தைகளின் உடல்நலனை பாதிக்கும் என்று கருதினால் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தயாராக உள்ளது. அதனால் பெற்றோர் கவலைப்பட வேண்டாம். ஒருவேளை பள்ளிகள் மூடப்பட்டால், குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவது கடினமாகிவிடும் என்றார்.