🌹 🌟இராஜராஜ சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராஜராஜேஸ்வரம் என்னும் சிவன் கோயில், தென் இந்திய வரலாற்றுப் பகுதியில் தலைசிறந்த சின்னமாகும் தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. இராஜராஜனின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது. ⭐தேவாரப்பாடல்கள் சிதம்பரம் கோயிலில் செல்லரித்து முழுவதுமாக அழிவவதற்குள் அவற்றைக் காப்பாற்றி தமிழ் மக்களுக்கு தந்தவன் ராஜராஜசோழன்இதை 11 திருமுறைகளாகப் பிரித்தனர். ராஜராஜ சோழனின் நிஜப்யெயா் அருண்மொழி. இந்த அருண்மொமியால் தித்திக்கும் அப்பா். சம்பந்தா், சுந்தரா் பாடிய தேவாரப்பாடல்கள் நமக்கு கிடைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *