கர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வில் 99.5 சதவிகிதம் பெற்றதாக நீதிமன்றத்தில் பியூனாக (Peon) வேலைக்குச் சேர்ந்த 23 வயது இளைஞர், நீதிபதி முன் வாசிக்கத் திணறியதையடுத்து உண்மை வெளிவந்திருக்கிறது. ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள சிந்தனூர் தாலுகாவைச் சேர்ந்த பிரபு லக்ஷ்மிகாந்த் லோகரே என்ற இந்த இளைஞர், முதலில் கொப்பல் நீதிமன்றத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-05/132dfe97-d84a-4e51-80fc-912518eb53f1/62822696bfaf6.jpeg)
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நீதிமன்ற பியூன் பணியிடங்களுக்கு வெளியிடப்பட்ட இறுதி தகுதித் தேர்வுப் பட்டியலில் இவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதன்மூலம், யாத்கிரில் உள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் (District and Sessions Court) பியூனாக இவர் நியமிக்கப்பட்டார். அடுத்த சில நாள்களில் நீதிமன்றத்தில் பிரபு வாசிக்கத் திணறியதை நீதிபதி கவனித்தார். இதில், பிரபுவின் மீது சந்தேகமடைந்த நீதிபதி அவரின் கல்வித் தகுதி பற்றி விசாரிக்குமாறு போலீஸிடம் தனிப் புகார் அளித்தார்.
அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான எஃப்.ஐ.ஆர் அறிக்கையை ஏப்ரல் 26-ம் தேதியன்று இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தாக்கல்செய்தார். அதில், `பிரபு 7-ம் வகுப்புவரை மட்டுமே பள்ளியில் படித்திருக்கிறார். அதன்பிறகு எந்தப் பள்ளியிலும் சேராமல் நேரடியாக 10-ம் வகுப்புத் தேர்வெழுதி 625-க்கு 623 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறிருக்கிறார். ஆனாலும், இவரால் கன்னடம், ஆங்கிலம், இந்தியில் எழுதப் படிக்கத் தெரியாதது அவரின் கல்வித் தகுதியைப் பற்றி மேலும் சந்தேகத்தை எழுப்புகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-02/351f3f7e-558c-4d09-9be8-3451c0cac1a3/vikatan_2022_05_fdad60e4_6e1c_4468_9a55_9ac017a65827_628c6e57a870f.webp)
இதனால் பிரபுவின் கையெழுத்தை அவரது 10-ம் வகுப்பு விடைத்தாள்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்படி போலீஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, `இது போன்ற மோசடிகள் மூலம் திறமையானவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இத்தகைய நியாயமற்ற நடைமுறைகள் மூலம் அரசுப் பணிகளைப் பெற்றுள்ள பிரபு போன்றவர்கள் இருந்தால் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று கூறினார்.
இன்னொருபக்கம் பிரபு, கடந்த 2017-18ம் ஆண்டு பாகல்கோட் மாவட்டத்திலுள்ள பனஹட்டியில் ஒரு கல்வி நிறுவனத்தில் தனித்தேர்வராக 10-ம் வகுப்புத் தேர்வு எழுதியதாகவும், அந்தத் தேர்வை டெல்லி கல்வி வாரியம் நடத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb