அனைவரும் உடல் ஆரோக்கியத்தின் மீது கவனமாக இருங்கள், எனக்கு நிறைய உறவினர்கள், பெரிய குடும்பம் இருக்கிறது. அனைவருமே வசதியானவர்கள்தான், ஆனால் நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது, என்னுடன் யாரும் இல்லை, அனைவரும் விலகி விட்டார்கள். என் நண்பர்கள் கூட அப்போது என்னுடன் இல்லை. ஆனால், அப்போது என்னுடன் இருந்தது என் பெற்றோர், என் சகோதரர், சகோதரிகள்தான்.
![மனிஷா கொய்ராலா](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-05%2Fa5751923-d680-4405-b40c-2d670a53278d%2F1683518533_manisha_koirala.jpg?auto=format%2Ccompress)
புற்றுநோய் பாதித்தபோது எனக்கு பல விஷயங்கள் நடந்தன. நோய் பாதிப்புக்கு முன்பு இருந்த போல, இப்போது என் உடல் இல்லை. என்னால் இப்போது எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. இப்போதும் நான் மன அழுத்தத்தோடுதான் இருக்கிறேன், அதே வலியோடுதான் என் வேலைகளை செய்கிறேன்” என்று வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.