அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் பிராங்க்ஸ் பகுதியில் மே 1-ம் தேதி அதிகாலை 3 மணியளவில், சாலை ஓரத்தில் முகமூடி அணிந்த 45 வயதுடைய நபர் ஒருவர், ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார். சில நிமிடங்களில் அந்தப் பெண் அங்கிருந்து நகர்ந்தபோது, அந்த நபர் பெல்ட்டால் செய்யப்பட்ட ஒரு வளையத்தை அந்தப் பெண்ணின் கழுத்தில் போட்டு, இழுத்தார். பின் அந்தப் பெண்ணை, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கு இடையில் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

காவல்துறை

காவல்துறை

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நியூயார்க் நகரிலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, குற்றவாளியைத் தேடி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோ, வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *