இந்தப் போட்டி முடிந்த பிறகு டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கும் டெல்லி அணி வீரர்களுக்கும் ஐ.பி.எல் நிர்வாகம் அபராதம் விதித்திருக்கிறது. எதற்கு? ஏன்?

ஐ.பி.எல் இல் Slow Over rate என்கிற விதிமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஒரு அணி 20 ஓவர்களை 90 நிமிடங்களுக்குள் வீசி முடிக்க வேண்டும். திடீரென ஏற்படும் காயங்கள், தவிர்க்க முடியாத இடைவெளி இதையெல்லாம் கழித்துவிட்டுதான் இந்த 90 நிமிடங்கள் கணக்கு வைக்கப்படும். அப்படி பார்க்கையில் 90 நிமிடங்களுக்குள் பந்துவீசி முடிக்கவில்லையெனில் அந்த அணியின் கேப்டனுக்கும், அணிக்கும் அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது.

முதல் முறையாக ஒரு அணி இப்படி காலதாமதத்தைச் செய்து “Slow Over rate’ பிரச்சனையில் சிக்கினால் அந்த அணியின் கேப்டனுக்கு மட்டும் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறையாக அதே அணி அதே தவறை செய்தால் கேப்டனுக்கு 24 லட்ச ரூபாய் அபராதமும் மற்ற வீரர்களுக்கு 6 லட்ச ரூபாய் அல்லது அவர்களின் போட்டி ஊதியத்தில் 25% தொகை என எது குறைவோ அந்த தொகை அபராதமாக விதிக்கப்படும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *