லக்னோ அணியின் சார்பில் சித்தார்த் மணிமாறன் எனும் தமிழக வீரர் சிறப்பாக பந்துவீசி விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். போட்டிக்குப் பிறகு கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதைப் பற்றி சித்தார்த் மணிமாறன் நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.
![விராட் கோலி](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-04%2Fb258700c-2342-4bfe-881d-5e07e7e95465%2Fd6c091a6_2b2c_4d81_b34c_5d9bfe5f411b__1_.webp?auto=format%2Ccompress)
ஆட்டத்தில் விராட் கோலியின் விக்கெட்தான் திருப்புமுனையாக அமைந்திருந்தது. ஏனெனில், விராட் கோலி கடந்த இரண்டு போட்டிகளிலுமே அரைசதம் அடித்திருந்தார். விராட் கோலி நின்று ஆடியிருந்தால் போட்டியின் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கலாம். அப்படி ஒரு சூழலில் பவர் ப்ளேயில் பந்துவீசி பவர்ப்ளே முடிவதற்குள்ளாகவே விராட் கோலியை 22 ரன்களில் சித்தார்த் மணிமாறன் வீழ்த்தியிருந்தார்.