சினிமா காட்சிகளில்கூட அவ்வளவு சீக்கிரம் கோபப்படாத சாஃப்ட்டான சரண்யா கொலைமிரட்டல் விடுக்கும் அளவுக்குப் போனாரா? புகார் கொடுத்த பக்கத்து வீட்டு பெண்மணிக்கும் சரண்யா பொன்வண்ணனுக்கும் இடையே நடந்தது என்ன? விசாரித்தபோதுதான், இரு தரப்பிலும் நடந்த உண்மைத் தகவல்கள் கிடைத்தன.
“நாயகன்’ படத்தின் மூலம் பிரபலமாகி பல்வேறு படங்களில் நடித்துத் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தர் சரண்யா பொன்வண்ணன். இவரின், கணவர் நடிகர், இயக்குனருமான பொன்வண்ணன். சென்னை விருகம்பாக்கத்திலுள்ள பத்மாவதி நகரில் மகள்களுடன் வசித்துவருகிறார்கள். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஸ்ரீதேவி என்பவர் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், காரை எடுப்பதற்காக தனது வீட்டின் கேட்டை திறந்தபோது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த நடிகை சரண்யாவின் காரை இடிப்பதுபோல் சென்றதாகவும் இதனால், கோபப்பட்ட சரண்யா மற்றும் அவரின் குடும்பத்தினர் தங்களது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தங்களுக்கும் தங்களது வீட்டினருக்கும் கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
![சரண்யா பொன்வண்ணன்](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-04%2Fed3fc2ae-b27f-463c-b29a-27f27eee76c5%2F2edf8350-5d11-4e57-bb4f-c1504af21002.avif?auto=format%2Ccompress)
இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்திவருவதாகவும் பரபரப்பாகி வரும் சூழலில், என்ன நடந்தது? என புகாரை விசாரித்து வரும் விருகம்பாக்கம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணனிடமும் விசாரித்தோம்,