அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “செஸ் போட்டிகளில் வீராங்கனைகள் எப்படி பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறார்கள் என்பதைச் சொல்ல விரும்புகிறேன். சில ஆட்டங்களில் நான் முக்கிய நகர்வுகளைச் செய்ததும், ஆட்டம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது என்று நினைத்து பெருமைப்பட்டேன். ஆனால் பார்வையாளர்கள் ஆட்டத்தைப் பார்க்கவில்லை.
மாறாக எனது உடை, முடி, உச்சரிப்பு என போட்டிக்கு தேவை இல்லாத மற்ற விஷயங்களையே கவனித்தனர். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. பெண்கள் சிறப்பாக விளையாடினாலும் அதை யாரும் கவனிப்பதில்லை என்பதே உண்மை. பொதுவாகவே வீராங்கனைகள் குறைவாக மதிக்கப்படுகிறார்கள். இந்த நிலை மாறி பெண்களுக்கு சமமான மரியாதை கிடைக்க வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.