“சூப்பர் ஓவரில் ரோஹித்தை வெளியே அழைத்துவிட்டு ரிங்குவை அனுப்பியது அஷ்வின் லெவல் யோசனை” என தமிழக வீரர் அஷ்வினைக் குறிப்பிட்டு அந்த முடிவு குறித்து வேடிக்கையாக இந்தியப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியிருந்தார்.
இந்தப் பிரச்னையில் ஐ.சி.சியின் விதிமுறைகள் என்ன சொல்கின்றன என்பதையும் பார்க்க வேண்டும். மேலே குறிப்பிட்டதைப் போல ஒரு சூப்பர் ஓவரில் அவுட்டான பேட்டர், அடுத்த சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய முடியாது என்பதைத்தான் டி20 போட்டிகளுக்கான சூப்பர் ஓவர் விதிகளில் ஐ.சி.சி குறிப்பிட்டிருக்கிறது. இதன்படி பார்த்தால் ரோஹித் சர்மா நிச்சயமாக இரண்டாவது சூப்பர் ஓவரில் களமிறங்கியிருக்க முடியாது. ஆனால், ரோஹித்திற்கு ஆதரவாகக் கருத்துகளை கூறி வருபவர்கள் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடுகின்றனர். பௌலர்களாலோ பீல்டர்களாலோ “டிஸ்மிஸ்’ செய்யப்பட்ட பேட்டரால்தான் ஆட்டத்திற்குள் மீண்டும் வர முடியாது. ரோஹித்திற்கு அப்படி நடக்கவில்லை. அவர் தானாக ரிட்டையர்டு அவுட் ஆகிச் சென்றார். அதனால் அவரின் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் ஆட்டத்திற்குள் வரலாம் என்கிறார்கள்.