அதில்,“ எங்கள் வாழ்க்கையில் உங்களின் வெற்றிடத்தை எப்போதும் உணர முடிகிறது. நான் தந்தை ஆன பிறகு ஒரு தந்தையின் உணர்வு என்ன என்பதையும், என் வாழ்வில் தவறவிட்ட விஷயங்களையும் உணர்ந்தேன். சில மகிழ்ச்சியான நினைவுகளை நினைவு கூறும்போது நீங்கள் எங்களுடன் இப்போது இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார். இந்திய அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் தனது சிறப்பான ஆட்டத்தை பும்ரா வெளிப்படுத்தி வருகிறார்.

தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனைதொடர்ந்து நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 16 பேர் கொண்ட அணியில் பும்ரா இடம்பெற்றிருக்கிறார். ரோஹித் சர்மா வழிநடத்தும் இந்திய அணிக்கு பும்ரா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *