காங்கிரஸ், சி.பி.எம் கட்சியினர் சொல்வதுபோல நாங்கள் இதில் எந்த அரசியலும் பார்க்கவில்லை. தேர்தலுக்காக இந்த யாத்திரையை நடத்தவில்லை. அரசியல் லாபம், நஷ்டம் குறித்த கணக்குகளை நாங்கள் பார்க்கவில்லை. மணிப்பூர் பிரச்சனையை மிசோரம் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய பிரசாரமாக முன்னெடுத்து சென்றது. ஆனால், காங்கிரஸுக்கு கடந்த முறை இருந்த சீட்டுகளும் பறிபோனது. கிறிஸ்தவ சமூகத்தை, பொய் பிரச்சாரம் மூலம் திசை திருப்ப முடியாது. 99 சதவிகித கிறிஸ்தவ மக்கள் உள்ள மிசோராமில் எங்களுக்கு இரண்டு மடங்கு சீட்டுகள் கிடைத்தன. ஓட்டும்  இரட்டிப்பாகி உள்ளது.

சினேக யாத்திரையில் பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்

சினேக யாத்திரையில் பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்

காங்கிரஸும், சி.பி.எம் கட்சியும் தவறான பிரசாரம் செய்து வருகின்றன. அவர்களின் பிரசாரங்களை முடிவுக்கு கொண்டு வரவும் இந்த சினேக யாத்திரை பயனுள்ளதாக இருக்கும். காங்கிரஸைவிட சிறுபான்மையினருக்கு, அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் கட்சியாக பா.ஜ.க உள்ளது. காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் சதீசனை யாராவது நம்புவார்களா. சதீசன் அகங்காரமாக செயல்படுகிறார். இது அனைவரும் சேர்ந்த ஒரு நாடு. காங்கிரஸை விட நம்பிக்கையும் ஆதரவும் பா.ஜ.க-வுக்கு சிறுபான்மை சமூகம் மத்தியில் உள்ளது” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *