திருமணத்திற்கு பின் தம்பதிகளிடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்படுவது இயல்புதான். ஆனால், திருமணத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட  ப்ரீ வெட்டிங் ஷூட் (Pre wedding photo shoot) ஹைதராபாத்தை சேர்ந்த போலீஸ் தம்பதிக்கு பிரச்னையாக உள்ளது.

ஹைதாரபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் ஆய்வாளராக வேலை செய்யும் பாவனாவும், அதே காவல் நிலையத்தில் ஆயுதப்படை காவல் ஆய்வாளராக வேலை செய்யும் ராவூரி கிஷனும் காதலித்து வந்தனர்.

பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மாதம் 26 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இருவரும் திருமணத்திற்கு முன்பாக நடத்திய ப்ரீ வெட்டிங் ஷூட்டிங்தான் இப்போது வினையாகியுள்ளது.

மலைவாழ் இடங்கள், இயற்கை சூழ்ந்த மரங்களுக்கு மத்தியில் ப்ரீ வெட்டிங் சூட்டிங் நடத்தப்படும் நிலையில், காவல் தம்பதி தேர்ந்தெடுத்தோ தாங்கள் பணியாற்றிய காவல் நிலையம். அதுவும் போலீஸ் வாகனத்தை பயன்படுத்தி காவல் நிலையத்திலேயே ப்ரீ வெட்டிங் சூட் நடத்தியததால், காவல் காதல் தம்பதியிடம் உயரதிகாரிகள் விவரம் கேட்கும் அளவிற்கு சென்றுள்ளது. அதேநேரத்தில் காவல் தம்பதி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *