நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, இந்த கூட்டத்தொடரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக பேட்டிளித்தார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று முதல் வரும் 22-ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு பாரத் என பெயர் மாற்றும் மசோதாவும், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவும் கொண்டு வரப்படவுள்ளன என்பன போன்ற யூகங்களுக்கு இடையே இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. பாரம்பரியம் மிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று நடைபெறும் இறுதி கூட்டம் என்பதால் பிரதமர் மோடி இன்று காலை 11 மணியளவில் உரையாற்றுவார் என தகவல் வெளியானது.
#WATCH | Special Session of Parliament | PM Narendra Modi says, “This is a short session. Their (MPs) maximum time should be devoted (to the Session) in an environment of enthusiasm and excitement. Rone dhone ke liye bahut samay hota hai, karte rahiye. There are a few moments in… pic.twitter.com/eLEy9GOmV4
— ANI (@ANI) September 18, 2023
இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கும் முன், செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், சந்திரயான்-3 இயக்கத்தின் வெற்றியால் நிலவில் இந்திய கொடி பறக்கிறது என்றும் சந்திரயான் வெற்றி உழைத்த விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துகளை பகிர்ந்துகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் “2047-ல் சிறந்த நாடாக இந்தியா உருவாகும் என்றும், நடப்பு கூட்டத்தொடரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.