30 வயது நபரின் அந்தரங்க உறுப்பை நாய் கடித்த பகீர் சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

சமீப காலமாகவே தெருவில் நடமாடும் நபர்களை நாய்கள் கடிக்கும் விபரீத சம்பவங்கள் அதிகம் நிகழ்கின்றன. அப்படியொரு சம்பவம் ஒன்று ஹரியானா மாநிலத்தில் நேற்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள கர்னல் மாவட்டத்தின் பிஜ்னா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதான கரண். இவர் வழக்கம் போல தனது வயலுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த போது தெருவில் சுற்றித் திரிந்த பிட்புல் வகை நாய் ஒன்று கரணை நோக்கி பாய்ந்துள்ளது.

நாய்யை குச்சி மூலம் அடித்து விரட்ட கரண் முயன்றுள்ளார். அப்போது அந்த நாய் அவரது அந்தரங்க உறுப்பை கடித்து தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த கரணை அப்பகுதி மக்கள் மீட்டு கர்னல் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: முன்னாள் எம்.பி மகன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை… உடலைப் பார்க்க தந்தைக்கு அனுமதி மறுப்பு..!

இந்த நாய் சுமார் ஒருவார காலமாகவே அங்கு திரிந்து கொண்டிருந்ததாகவும், இந்த நாயிடம் ஏற்கனவே ஒரு ஊர்காரர் கடிபட்டுள்ளதாகவும் ஊர் மக்கள் தெரிவித்தனர். கரண் தாக்கப்பட்ட சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு அந்த நாய்யை கம்பால் அடித்து கொன்றனர். தகவல் அறிந்த காவல்துறை வழக்கு பதிவு செய்து கரண் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *