விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி, இந்து சட்ட தொகுப்பு மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு கிடைக்காததால், சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 1952ம் ஆண்டில் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. சமூக நீதி போராளி, மாமேதை டாக்டர் அம்பேத்கர், தனது போராட்டங்களை வரும் சந்ததியினர் தொடர்வார்கள், பின்னர் இந்தியாவில் தீண்டாமை கொடுமை நிச்சயம் ஒழிக்கப்படும் முற்றிலும் என்ற நம்பிக்கையுடன், 1956ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி காலமானார். அவரது வழியில் இன்றளவும் நம் நாட்டில் நிலவும் தீண்டாமை கொடுமைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுகின்றன. அம்பேத்கரின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்வதில் ஹெச்.டி தமிழ் பெருமிதம் கொள்கிறது.