அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சவுத்போர்க் என்ற மாட்டுப் பண்ணை உள்ளது. இந்த மாட்டுப் பண்ணையில் கடந்த திங்கள்கிழமை அன்று இரவு திடீரென கோர தீ விபத்து ஏற்பட்டது.  அதில் வேலை பார்த்த ஒரு ஊழியர் படுகாயம் அடைந்தார். அத்துடன் அந்த பண்ணையில் இருந்த 18,000க்கும் மேற்பட்ட பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

தீ விபத்தின் காரணமாக பண்ணை பற்றி எரிந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வானில் கரும்புகை வீசிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், விபத்தில் சிக்கிய நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பண்ணையில் உரத்தில் இருந்த மீத்தேன் காரணமாக தீவிபத்து நிகழ்திருக்கலாம் என முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. இந்த விபத்தின் காரணமாக பண்ணையில் இருந்த 90 சதவீத மாடுகள் உயிரிழந்துள்ளன.

ஒவ்வொரு பசுவின் மதிப்பும் சுமார் 2 ஆயிரம் டாலர் எனக் கூறப்படுவதால் உயிரிழந்த பசுக்களின் மதிப்பு மட்டும் அமெரிக்க 36,000 டாலர் மதிப்பு கொண்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கால்நடை பண்ணை விபத்துகளில் பல விலங்குகள் முறையாக பராமரிக்கப்படாமல் விபத்தில் சிக்கி உயிரிழப்பதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் 65 லட்சம் விலங்குகள் தீ விபத்தில் உயிரிழந்ததாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *