திருவள்ளூர்:

அரக்கோணம் அருகே தீரன் திரைப்பட பாணியில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 பேர் பிடிபட்டனர். திருவாலங்காடு அருகே வியாசபுரத்தை சேர்ந்த இளைஞர்கள் 4 பேர் சிக்கினர். பிடிபட்ட 4 பேரிடம் இருந்து துப்பாக்கியை போலீஸ் கைப்பற்றியது. அரக்கோணம் அருகே கன்னிகாபுரத்தில் கடந்த 17ம் தேதி இரவு ஆடிட்டர் புஷ்கரன் வீட்டுக்குள் நுழைந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளை அடித்தனர். துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் 25 சவரன், ரூ.40,000ஐ கொள்ளையடித்து சென்றனர்.

அரக்கோணம் அருகே கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் புஷ்கரன். இவர் வீட்டில் கடந்த 17ஆம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கிச்சூடு நடத்தி மற்றும் கத்தியால் மிரட்டியும் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஆடிட்டர் புஷ்கரன், அவரது தாய் சுதா, பெரியம்மா லதா, பாட்டி ரஞ்சிதா ஆகிய 4 பேரும் படுகாயங்களுடன் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அவர்கள் தலையில் இருந்த குண்டுகளும் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது.

இந்த வழக்கில் துப்பாக்கிச்சூடு சம்பவம் காவல் துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. கொள்ளையர்கள் வந்து சென்ற இடத்தில் சிசிடிவி கேமராக்கள் ஏதும் இல்லை. வெறும் செல்போன் சிக்னலை வைத்து தான் குற்றவாளிகளை பிடிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இந்த சவாலை தொடர்ந்து காவல்துறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு திருவள்ளூர் மாவட்ட வியாசர்புரத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் முதற்கட்டமாக பிடிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து லேப்டாப் துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *