ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ரூ.51 லட்சத்து 31,000 சிக்கியது. உதவி செயற்பொறியாளர் நாகராஜ், இளநிலை பொறியாளர் லீலாவதி ஆகியோரும் போலீஸ் சோதனையில் சிக்கினர். திருப்பூர் திருமுருகன்பூண்டி பேரூராட்சி இளநிலைப் பொறியாளர் செல்லதுரையிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.