இந்தியாவுக்கு தேவையெனில் கூடுதல் ரஃபேல் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.இதுவரை 26 ரஃபேல் விமானங்களை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா வந்துள்ள பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில், ஐரோப்பிய யூனியன் கவுன்சிலின் தலைமை பதவிக்கு போட்டியிடும் பிரான்ஸ் இந்தியாவின் ஆதரவை கோரியுள்ளது.