ஆமை, கடலாமை ஆகிய இரண்டும் சுற்றுச்சூழல் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன. கடலாமைகளின் வாழ்க்கை முறை மற்றும் வாழ்விடம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றை நன்கு புரிந்துகொண்டு அவற்றின் நல்வாழ்வுக்கு பங்களிக்கவும் மக்களை வலியுறுத்தும் விதமாக உலக கடலாமைகள் தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் உலக கடலாமைகள் தினம் மே23ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த சிறப்பு மிக்க நாள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை பார்க்கலாம்