தம்முடைய செய்தித்தாளுக்கு அவரே ரிப்போர்ட்டராகவும், செய்திகளை அச்சிடுபவராகவும், விற்பவராகவும் செயல்பட்டார். ஓடும் ரயிலில் ஏறிய போது ஏற்பட்ட தீப்பிடித்ததில் அவருடைய ரயில் வியாபாரம் தடைப்பட்டது. ஸ்டேஷன் மாஸ்டரின் குழந்தையை ரயில் விபத்திலிருந்து எடிசன் காப்பாற்றியதற்காக அக்குழந்தையின் தந்தை எடிசனுக்கு தந்தி முறையை கற்பித்தார். பின்னர் தமக்குத் தேவையான தந்திக் கருவியை எடிசன் தாமே தயாரித்துக் கொண்டார்.