உத்தர பிரதேசம்:
உத்தர பிரதேச மாநிலத்தில் நெஞ்சை கலங்க வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அலிகார் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் ஆம்புலன்ஸ் கிடைக்காததால், மூன்று சக்கர சைக்கிளில் வைத்து தங்களது தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் கடுமையாக உடல்நலம் குன்றிய நபர், படுக்கையில் வைத்தபடி சைக்கிளில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சவாரியின் போது ஒரு சிறுவன் சைக்கிளை ஓட்ட, மற்றொரு பையன் பின்னால் இருந்து வண்டியை தள்ள உதவினான்.