Loading

2019ஆம் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,  மோடி என்ற துணை பெயர் கொண்ட அனைவர்களும் திருடர்களாக இருக்கின்றனர் என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்து, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதன் காரணமாக ராகுல் காந்தியின் மக்களவை எம்பி பதவியும் பறிபோனது.

இதன் விளைவாக ராகுல் காந்தி தங்கியிருந்த அரசு பங்களாவை வரும் ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மக்களவை செயலகம் நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து 12, துக்ளக் லேன் பகுதியில் ராகுல் தான் தங்கியிருந்த அரசு பங்களாவை இன்று காலி செய்தார்.

தனது பொருட்களை அங்கிருந்து தனது தாயார் சோனியா காந்தியின் 10 ஜன்பத் இல்லத்திற்கு லாரிக்கள் மூலம் கொண்டு சென்றார். 2004ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி காந்தி மக்களவை உறுப்பினராக உள்ள நிலையில், சுமார் 19 ஆண்டுகள் வசித்த பங்களாவை அவர் காலி செய்தார்.

இதையும் படிங்க: மதுபான கொள்கை ஊழல் வழக்கு… டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்…!

இது தொடர்பாக ராகுல் காந்தி மக்களவை துணைச் செயலாளருக்கு ஏற்கனவே கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “நான் 4 முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்று பொதுமக்களுக்குச் சேவையாற்றி உள்ளேன். அரசு பங்களாவில் இருந்த மகிழ்ச்சியான தருணங்களை மறக்க முடியாது” என்று தெரிவித்திருந்தார். ராகுலின் தங்கை பிரியங்கா காந்தியும் லோதி எஸ்டேட் என்ற பகுதியில் உள்ள அரசு பங்களாவில் தங்கியிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வந்த  பாதுகாப்பை சில ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசு விலக்கிய நிலையில் பங்களாவை காலி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *