சில மனிதர்கள் அவ்வபோது விநோதமான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் தங்களை அடையாளப்படுத்தி கொள்வது வழக்கம். திருமண விஷயத்தில் இப்படிப்பட்ட விநோத முயற்சிகளில் ஈடுபடுவோரைப் பார்க்கலாம். அந்த வகையில், குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண் கஷமா பிந்து என்பவர் மணமகனின்றி தன்னைத் தானே திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருந்தார்.