சேலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர்பரமசிவம்.
இவர் சேலத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழித்தடத்தில் செல்ல தாரமங்கலம் பணிமனை தொ.மு.ச. செயலாளரும், நடத்துனருமான குணசேகரன் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக ஓட்டுனர் பரமசிவம் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் நரேந்திரனின் ஆலோசனையின்படி,பரமசிவம், லஞ்சப் பணம் ரூ.5 ஆயிரத்தை குணசேகரனிடம் வழங்கினார்.
![](https://ipdtamil.com/wp-content/uploads/2022/01/Salem-Anti-Corruption-Police-have-arrested-a-driver-who-took-a-bribe-from-a-driver-to-go-on-a-bus-route.jpg)
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக குணசேகரனை கைது செய்தனர்.இதுதொடர்பாக, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– வால்டர்