உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த ஒமைக்ரான், தற்போது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கடந்த டிச.1ம் தேதி முதல் மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஒமைக்ரான் வைரஸ் மேலும் அதிகரித்தால் பள்ளிகள் மீண்டும் மூடப்படலாம் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இதே முடிவு எடுக்கப்பட்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது.