இதுகுறித்து வெளியான போலீஸ் அறிக்கையில், `காங்கரில் உள்ள சோட்பெட்டிய காவல் நிலையத்தின் எல்லைக்குள் பினகுண்டா பகுதியில், மாவட்ட ரிசர்வ் காவல் படையுடன் எல்லைப் பாதுகாப்புப் படை ஒருங்கிணைந்த நடவடிக்கையைத் தொடங்கியது. என்கவுன்ட்டருக்குப் பிறகு, அந்தப் பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டதில் 29 நக்சலைட்டுகளின் சடலங்கள், AK 47 துப்பாக்கிகள், INSAS/SLR/Carbine/.303 ரைஃபிள்கள் மற்றும் ஏராளமான வெடிபொருள்கள் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டன” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா

சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா

இந்த சம்பவம் தொடர்பாக மாநில துணை முதல்வர் விஜய் சர்மா, `எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்களுக்கு வழிகாட்டுகிறார். இனிவரும் காலங்களில் நக்சல் இல்லாத பஸ்தாரை (சத்தீஸ்கர் மாவட்டம்) உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருக்கிறது. பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்கள் மூலம் ஒரு தீர்வு வெளிவர வேண்டும், பஸ்தாரில் அமைதி நிலவ வேண்டும்’ என்று கூறினார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *