சென்னை:
இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், ‘மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு உதவ, தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்கு வெளியுறவு அமைச்சர் ஜெய் ஷங்கருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி. இதுபோன்ற மனிதாபிமான உதவிகள் இரு நாடுகளிடையே நல்லுறவை மேம்படுத்த உதவும் என பதிவிட்டுள்ளார்.