செ.கிருஷ்ணமுரளி, காசிமுத்து மாணிக்கம்

செ.கிருஷ்ணமுரளி, காசிமுத்து மாணிக்கம்

காசிமுத்து மாணிக்கம், வர்த்தக அணிச் செயலாளர், தி.மு.க

“1978-ல் மின்கட்டண உயர்வைக் கண்டித்துப் போராடிய விவசாயிகளை ஈவு, இரக்கமின்றி சுட்டுக் கொன்ற அ.தி.மு.க-வுக்கு விவசாயிகள் நலன் குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது… 2020-ல் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்து, விவசாயிகள் முதுகில் குத்திய பச்சோந்தி பழனிசாமி, இப்போது விவசாயிகளின் ஆதரவாளர்போல நாடகம் போடுகிறார். அ.தி.மு.க-போலன்றி, தி.மு.க என்றுமே விவசாயிகளின் பக்கம் நின்று அவர்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறது. விவசாயிகளுக்குக் கட்டணமின்றி இலவச மின்சாரம் வழங்கியது தொடங்கி எத்தனையோ நன்மைகளை ஒவ்வோர் ஆட்சியிலும் செய்துவருகிறது தி.மு.க. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சிப்காட் அமைக்கப்பட்டு வருவதன் மூலமாக, அங்கிருக்கும் படித்த விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பயனடைந்துவருகிறார்கள். இந்த உண்மைகளை மறைத்து, அமைச்சரின் பேச்சைத் திரித்து, தவறாகச் சித்திரிக்கிறது ஒரு கூட்டம். தி.மு.க ஆட்சியில் விவசாயிகளின் துயர் துடைக்கப்படுமே தவிர, யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். எதிர்க்கட்சியினர் பரப்பும் பொய்களை எந்த விவசாயியும் நம்பத் தயாராக இல்லை.”

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: