இப்படி துரோகத்துக்கே பழக்கமான எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸை பார்த்து தடித்த வார்த்தைகளில் பேசுகிறார், திமுகவில் சேர்ந்துவிட்டார் என்கிறார்.
எடப்பாடி பழனிசாமியை திமுக அரசு 3 ஆண்டுகளாக பொத்தி பாதுகாத்து வருகிறது. அவருக்கு எதிரான அனைத்து வழக்குகளும் எடப்பாடி சம்பந்தி மீதான ஊழல் வழக்கும் தற்போது தூங்குகிறது. எடப்பாடிக்கு எதிரான எந்த வழக்கையும் திமுக நடத்தவில்லை. திமுகவின் பி டீம் எடப்பாடி பழனிசாமிதான்.
40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறவே அதிமுக, பாஜக கூட்டணியிலிருந்து விலகியது. விஷச்செடிக்கு இரண்டரை ஆண்டுகளாக பாஜக அரசு உரம் போட்டு வளர்த்ததை இப்போது புரிந்துகொண்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி ஒ.பி.எஸ் குறித்து பேசுவதற்கு அருகதையற்றவர், ஜெயலலிதாவின் ஜீவ நாடி திமுக எதிர்ப்புதான், தற்காலிக தீர்ப்பினால் அதிமுக அலுவலகத்த்திற்கு ஒ.பி.எஸ் செல்லவில்லை, ஒ.பி.எஸின் கருத்தை கேட்டு இருந்தால் இன்று அதிமுக மீது ஊழல் வழக்குகள் வந்திருக்காது.
ஒ.பி.எஸின் கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்ளவில்லை, நீதிமன்ற தீர்ப்பால் அதிமுக வேஷ்டிக்கு பதிலாக காவி வேஷ்டி கட்ட வேண்டிய நிலை வந்துள்ளது. காவி வேஷ்டி கட்டி வரும் ஒ.பி.எஸ்ஸை பார்த்து அதிமுக தொண்டர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு என்னோடு சேர்ந்துகொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னார், இதுவரை எத்தனை மன்னிப்பு கடிதம் வந்துள்ளது என்பதை சொல்வாரா? விஷம் குடித்து செத்தாலும் சாவோம், எடப்பாடி பழனிசாமி பக்கம் செல்ல மாட்டோம்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டணி அமையும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாகும். எந்த தீர்ப்பும் இறுதியானது அல்ல.
அரசியல் காலண்டரில் கடைசி பக்கம் என எதுவும் இல்லை, நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறது, பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன, பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக தலைமை கழகம் இறுதி முடிவு எடுக்கும்” என கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.