2021 வரை முதல்வராக இருந்த அவர், 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பதவி வழங்குவதில் கட்டுப்பாடுகளை பா.ஜ.க பின்பற்றுவதால் அவரிடமிருந்து முதல்வர் பதவி பறிபோனது. அதனால், அவர் சார்ந்த லிங்காயத்து சமூகத்தினர் பா.ஜ.க மீது அதிருப்தியில் இருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் கிளப்பிவிட்டனர். சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோற்றதற்கு அதுதான் முக்கிய காரணம் என்று பா.ஜ.க-வில் ஒரு தரப்பினர் கூறினர். இந்த நிலையில், எடியூரப்பாவின் குடும்பத்தாருக்கு முக்கியத்துவம் அளித்தால், வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறிவந்தனர்.

எடியூரப்பா

எடியூரப்பா

இந்த சூழலில், தன் மகனுக்கு மாநிலத் தலைவர் பதவி தர வேண்டும் என்று பா.ஜ.க தலைமைக்கு எடியூரப்பா அழுத்தம் கொடுத்துவந்த நிலையில், கர்நாடக பா.ஜ.க துணைத்தலைவராக விஜயேந்திரா நியமிக்கப்பட்டார். தற்போது, மாநிலத் தலைவராகவே அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதை விமர்சித்திருக்கும் கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், “மற்ற கட்சிகளை வாரிசு அரசியல் செய்வதாக விமர்சித்துவரும் பா.ஜ,க., தற்போது எடியூரப்பாவின் மகனை தலைவராக்கியிருக்கிறது. இதன் மூலம், பா.ஜ.க-தான் வாரிசு அரசியலில் ஈடுபடுகிறது என்பது உறுதியாகியிருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: