கேமராவும் கையுமாகச் சுற்றும் எஸ்.ஜே.சூர்யா, துப்பாக்கியும் கையுமாகச் சுற்றும் லாரன்ஸ் என இருவரும் திரையில் மிரட்டியிருக்கிறார்கள். சுவாரஸ்யமான கதைக்களத்துடன் தொடங்கி எமோஷனலாகப் படத்தை முடித்துப் பார்ப்பவர்களையும் கலங்கடித்துவிட்டார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இப்படியான பல விஷயங்கள் ஒரு புறமிருக்க, படத்தின் இறுதியில் நடிகர் இளவரசு பேசும் ‘For My Boy, Cesar’ என்கிற வசனம் பார்ப்பவர்களைத் தன்னை மறந்து கைதட்டவும் விசில் அடிக்கவும் வைத்தது.
