கோவை / பொள்ளாச்சி / திருப்பூர் / உடுமலை / உதகை: கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே நேற்று ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது. கோவை மாவட்ட தேவர் பேரவை தலைவர் சுந்தரம் கொடி அசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு குறு, சிறு தொழில்கள் சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.சுருளிவேல் தலைமை வகித்தார். உமா தேவி மருத்துவமனை தலைவர் டாக்டர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார்.