இந்நிலையில், பெண்களிடம் ஆட்சேபிக்கும் வகையில் பேசினார் உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி ரெட் கார்டு கொடுத்து அவரை வெளியேற்றிவிட்டனர். பலரும் பிரதீப்பிற்கு ஆதரவாகக் கருத்துக்களைப் பகிர்ந்து வந்தனர். இதனிடையே நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு பிரதீப் அடிக்கடி தனது சமூக வலைதளபக்கங்களில் தன் ரசிகர்களுக்காகப் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப்பதிவில், “இன்ஸ்டாகிராமில் யாரும் எனக்கு ப்ரண்ட் ரெக்வஸ்ட் கொடுக்க வேண்டாம். என்னுடடைய சந்தோஷமானத் தருணங்களை என் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள நான் வைத்திருக்கும் எனக்கான தனிப்பட்ட இடம் இது. இதற்காக, நான் உங்களை என் நண்பர்களாகக் கருதவில்லை என்ற அர்த்தம் கிடையாது. ஆனால், யாரையும் நம்பி என் வாழ்க்கையில் அனுமதிக்கும் இடத்தில் தற்போது நான் இல்லை. சமூக வலைதளங்கள் பாசிடிவ் மற்றும் நெகடிவ் பக்கங்களைக் கொண்டது. தனிப்பட்ட முறையில் ஒருவரை வீழ்ச்சி அடையவும் செய்யும். எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் தாக்கப்படுவதை நான் விரும்பவில்லை.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: