8. தங்களைப்போன்ற ஐயப்ப பக்தர்களைக் காணும்போது, ‘சாமி’ என்றே அழைக்க வேண்டும். மாலை அணிந்தவர்கள் பெண்களாக இருந்தால், ‘மாளிகைபுறத்து சாமி’ என்று அழைக்கும் வழக்கமும் உண்டு.

9. உறங்கும்போது தலையணை, மெத்தை ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. மெல்லிய துணிகளையே விரித்துப் படுக்கலாம். தனியாகப் படுப்பதுவே நலம். எக்காரணம் கொண்டும் பகலில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

10. மலைக்குப் புறப்படும் முன்பாக வீட்டில் குருசாமியைக் கொண்டு ஐயப்பனுக்கு பூஜை செய்து அன்னதானம் செய்ய வேண்டியது அவசியம். இதில் அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், கடன் வாங்கிச் செலவு செய்யக் கூடாது. அன்னதானம் ஐயப்ப பூஜையில் பிரதானம். ஐயனை அன்னதானப் பிரபு என்றுதான் அழைக்கிறோம் என்றாலும் கடன் வாங்கிப்பெரிய அளவில் பூஜை செய்வதோ உணவிடுவதோ தேவையில்லை. பூஜைக்கு வரும் ஐயப்ப சாமிகளுக்கு ஒரு வாழைப்பழம் தான் தரமுடியும் என்றாலும் அதைக் கொடுத்து ஆசி வாங்கிக்கொள்ளலாமே தவிர கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: