மாவட்டம் முழுவதும் உள்ளாட்சிகள்,மின்வாரியம் சார்பில் ரோட்டோரங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் நவீன எல்.இ.டி., பல்புகள் பொருத்த பட்டுள்ளது. இந்த எல்.இ.டி., பல்புகளின் ஒளிரும் அளவான வாட்ஸ் குறைவாக இருப்பதால் குறைந்த வெளிச்சமே நிலவுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
மின்கம்பத்திலிருந்து வெளிச்சம் தரையில் படும்போது கீழே மங்கலாகத்தான் தெரியும் நிலை உள்ளது. புதிய எல்.இ.டி., பல்புகள் சில மாதங்கள் பிரகாசமாக சுடர் விட்டாலும் நாளடைவில் ஒளி மங்கி விடும் நிலை தொடர்கிறது. தற்போதுள்ள பெரும்பாலான பல்புகளில் சோலார் சிஸ்டம் உள்ளதால் போதிய சூரிய வெளிச்சம் இல்லாமல் இருந்தாலும் ஜார்ஜ் பற்றாக்குறை நிகழ வாய்ப்பு உள்ளது.
கிராமங்களில் உள்ள ரோடுகளில் பெரும்பாலும் தெருவிளக்குகள் மட்டுமே வழிகாட்டியாக உள்ளதால் ஊராட்சி, பேரூராட்சிகளில் மட்டுமாவது அதிக வாட்ஸ் பல்ப்புகள் பொருத்தி மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடரும் இப்பிரச்னை மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
