நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாய பயிர்களை, காட்டுபன்றிகள் சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நெல்லிக்குப்பம் பகுதி களில், காட்டுபன்றிகள் இனப்பெருக்கம் அடைந்து ஆயிரத்திற்கும் மேல் உள்ளன. இவைகள், இரவு நேரங்களில் கரும்பு, நெல், வாழை போன்ற பயிர்களை நாசம் செய்து வருகிறது.

இதனால், மகசூல் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வனத்துறையினரிடம் விவசாயிகள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இநிலையிலேயே நேற்று முன்தினம் இரவு, விஸ்வநாதபுரத்தை சேர்ந்த வெங்கடேசன், முருகன் ஆகியோர் பயிர் செய்திருந்த வாழை கன்றுகளை, காட்டுபன்றிகள் வேரோடு பிடுங்கி போட்டது.

அவர்கள் கூறுகையில், கேரளாவை போல் தமிழக அரசும் காட்டு பன்றி களை கட்டுப்படுத்த அதிரடியில் இறங்க வேண்டும்.

அப்போதுதான், விவசாயிகளை பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும் என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

Dinamalar iPaper Combo
-->

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

-->

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: