இதற்கான கலந்துரையாடலில் ‘நிக்சனை எவிக்ஷனுக்கு நாமினேட் செய்ய வேண்டாம் என்று அழுத்தமாக மறுத்தார் விசித்ரா. இது சரியான மூவ். ஏனெனில் இப்போது அவர் நிக்சனை தேர்ந்தெடுத்தால் பழிவாங்கல் உணர்ச்சி என்று பார்வையாளர்கள் கருதிக் கொள்வார்கள். ‘சுமாராக ஆடுபவர்கள் எப்படியும் வெளியே செல்வார்கள். பல வாரங்களாக தப்பித்துக் கொண்டே இருக்கிற போட்டியாளர்களை நாமினேட் செய்யலாம்’ என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மாயாவின் பெயரை மணியும் ஜோவிகாவின் பெயரை விசித்ராவும் முன்மொழிந்தார்கள். இதற்கான பவர் விஷ்ணுவிடம் அளிக்கப்பட்டது. நான் கேட்கும் போது அந்த இரண்டு பெயர்களை சொல்லுங்கள் என்று பிக் பாஸ் அறிவித்தார்.

விஷ்ணு, விசித்ரா

விஷ்ணு, விசித்ரா

நாமினேஷன் லிஸ்ட்டில் மாயாவும் ஜோவிகாவும் வருவது சிறப்பான விஷயம். கூட்டணியால்தான் அவர்கள் இத்தனை வாரமும் நழுவிக் கொண்டிருந்தார்கள். இந்த வாரத்தில் மாயா கூட தப்பித்து விட்டார். எனில் இவர்கள் மக்களை சந்தித்து, அந்த ஆதரவு பெற்று மீண்டும் ஆட்டத்திற்குள் திரும்புவதுதான் நல்ல விஷயமாக இருக்கும்.. விஷ்ணு யார் பெயரை சொல்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த வாரம் கானா பாலா வெளியேறுகிறார் என்று தெரிகிறது. ‘சும்மா உக்காந்து சோறு தின்னுக்கினு வீட்டில் இருக்க மாட்டேன்’ என்று அவரது ஆரம்பத்தில் பாடியதெல்லாம் உற்சாகமாகத்தான் இருந்தது. ஆனால் பிறகு வெறும் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ் போலவே உலவிக் கொண்டிருந்தது ஏமாற்றம்.

விதித்ராவின் விதிமீறல் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி கமல் இன்றாவது பேசுவார் என்று எதிர்பார்ப்போம்.

விசித்ரா நடந்துகொண்டது குறித்த உங்களின் கருத்தை கமென்ட்டில் தெரிவியுங்கள்!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: