ஒன்றிய அரசிடம் அவருக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கான நிதியைப் பெற்றுத் தருவதற்கு முயலலாம். ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையைப் பெற்றுத் தரலாம். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு உரிய நிதியை வாங்கித் தரலாம். மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் பாலமாக இருக்கலாம். ஆனால், இதில் எதையும் செய்யாமல், மாநில அரசின் திட்டங்களுக்கு எவ்வாறு முட்டுக்கட்டை போடலாம் என்று நாள்தோறும் யோசித்து செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் தினமும் யாரையாவது அழைத்து வைத்துக் கொண்டு வகுப்பெடுத்து, தவறான பாடங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். விழாக்களில் விதண்டாவாதமாகக் கருத்துகள் சொல்கிறார். அரசின் கொள்கைகள் குறித்து பொதுவெளியில் விளக்கம் அளிப்பதும், விவாதம் செய்வதும் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. திராவிடக் கொள்கை, சமத்துவம், சமூகநீதி, பகுத்தறிவு, சுயமரியாதை ஆகியவை தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இருப்பதை அவரால் ஏற்க முடியவில்லை.


முதல்வர் ஸ்டாலின்
ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும், அது இருக்கும் வரை மக்களாட்சித் தத்துவத்துக்கு அடங்கியிருப்பதுதான் மரபு. பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் குடைச்சல் கொடுத்து வருகிறார்கள். இப்போது உச்ச நீதிமன்றம் தலையில் கொட்டுவைத்தவுடன், கோப்புகளைத் திருப்பியனுப்புவதும், சில கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவதும் என நாடகமாடுகிறார் ஆளுநர். எனவே அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 200-ன் படி எந்த காரணமும் குறிப்பிடாமல் திருப்பியுனுப்பியிருக்கும் 10 சட்ட முன்வடிவுகளை நிறைவேற்றித் தருமாறு, சட்டமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.