
தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம்: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்):
1. எம். பிரதாப் – சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை துணைச் செயலா் (தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை நிா்வாக இயக்குநா்).
2. ஜெ.ஜெயகாந்தன் – மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை ஆணையா் (ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சிறப்புச் செயலா்).
3. டி. ரத்னா – ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இணைச் செயலா் (மதுவிலக்கு மற்று ஆயத் தீா்வைத் துறை இயக்குநா்).
4. பி. காயத்ரி கிருஷ்ணன் – சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் தலைமை நிா்வாக அதிகாரி (வணிக வரிகள் துறை இணை ஆணையா் – கோவை).
5. கே.விஜயகாா்த்திகேயன் – தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை நிா்வாக இயக்குநா் (மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலா் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பாா்).
6. ஷ்ரேயோ பி. சிங் – தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் (வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநா்).
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…