மேட்டூர்: மேட்டூர் அருகே காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட வெடிப்பால் சாலையில் தண்ணீர் வீணாகிறது.

காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், பி.என்.பட்டி, வீரக்கல் புதூர், மேச்சேரி, ஓமலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. திட்டம் செயல்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் கடந்த நிலையில் தண்ணீரின் வேகம், குடிநீரை சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் குளோரின் உள்ளிட்ட காரணங்களால் குடிநீர் திட்ட இரும்பு குழாயில் அரிப்பு ஏற்பட்டு, குழாயில் அடிக்கடி வெடிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக லட்சக் கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் வெளியேறுகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: