விருதுநகர்: மைசூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் விரைவு ரயிலில், பெங்களூரு சித்பேட்டிலிருந்து விருதுநகருக்கு அனுப்பிவைக்கப்பட்ட 5 பண்டல்களில் குட்கா கடத்தப்படுவதாக ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
மைசூரு விரைவு ரயில் நேற்று காலை விருதுநகர் வந்தபோது, பார்சலில் வந்த 5 பண்டல்களும் இறக்கப்பட்டன. அவற்றைவாங்குவதற்காக வந்த நபரை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் பிடித்தனர்.