சுதந்திரப் போராட்ட வீரரும், தகைசால் தமிழர் விருதுபெற்ற மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான தோழர் என்.சங்கரய்யா, வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எம்.பி-க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உட்பட தி.மு.க தலைவர்கள் பலர், குரோம்பேட்டையிலுள்ள சங்கரய்யாவின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், `தியாகி சங்கரய்யாவுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் - தோழர் சங்கரய்யா

முதல்வர் ஸ்டாலின் – தோழர் சங்கரய்யா

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `தகைசால் தமிழர், முதுபெரும் பொதுவுடைமைப் போராளி, விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா மறைந்த செய்தியால், துடிதுடித்துப் போனேன். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நலம் பெற்றுவிடுவார் என்றே நம்பியிருந்த வேளையில், அவர் மறைந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: