
முதுபெரும் சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா (102) இறுதி நிகழ்வுகள் வியாழக்கிழமை(நவ.16) நடைபெறும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
முதுபெரும் சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா (102) வயது உடல் நலக் குறைவின் காரணமாக புதன்கிழமை காலை 9.30 மணியளவில் மருத்துவமனையில் காலமானார்.
இதையும் படிக்க | அரசு மரியாதையுடன் சங்கரய்யாவின் இறுதிச்சடங்கு: முதல்வர் அறிவிப்பு
அவருடைய உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலும், மதியம் 2 மணி முதல் தியாகராய நகர், வைத்தியராமன் தெருவில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் மாநிலக் குழு அலுவலகத்திலும் வைக்கப்படவுள்ளது.
இறுதி நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை காலை(நவ.16) 10 மணியளவில், மார்க்சிஸ்ட் அகில இந்திய தலைவர்களின் பங்கேற்போடு நடைபெறும். கட்சியின் அனைத்து கிளைகளும், கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், ஒரு வார காலம் நிகழ்ச்சிகளை ரத்து செய்து துக்கம் கடைப்பிடிக்கப்படும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…