
மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியிருக்கும் சங்கரய்யா, 1968-ல் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்கிட தீர்மானத்தை அண்ணா முன்மொழிந்தபோது, `தமிழை ஆட்சி மொழி ஆக்கிட தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது; பாட மொழியாக, நீதிமன்ற மொழியாக, நிர்வாக மொழியாக தமிழை ஆக்குவதோடு அடுத்த 5 ஆண்டுகளில் இதற்கான அடிப்படை கட்டமைப்புகளையும் அரசு உருவாக்கிட வேண்டும்” என்ற திருத்தத்தை முன்வைத்தார். இந்தத் திருத்தம் அண்ணாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

`சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டதே பெரிய பரிசு’ என அரசு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரருக்கான பென்ஷனைக் கூட ஏற்றுக்கொள்ளாத சங்கரய்யா, 2021-ல் தமிழ்நாடு அரசு தகைசால் விருது கொடுத்தபோது, தனக்கு வழங்கப்பட்ட ரூ.25 லட்சத்தைக் கூட `ஏழைகளுக்கு உதவுங்கள் என திருப்பிக்கொடுத்துவிட்டார்.
1947-க்கு முன்னும் பின்னும் மக்களுக்காகவே தோழர் சங்கரய்யாவாக குரல்கொடுத்துக்கொண்டிருந்தவர், சுதந்திரம், மக்கள் உரிமை, தொழிலாளர் நலன், வறுமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு எனக் களமாடிய அனைத்தும் இன்னும் பல நூற்றாண்டுகள் வரலாற்றில் நிலைத்து இருக்கும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.