‘கங்குவா’ படப்பிடிப்பு தாய்லாந்தைத் தொடர்ந்து தற்போது சென்னையில் நடந்து வருகிறது. கடந்த 8ம் தேதி தொடங்கிய இந்தப் படப்பிடிப்பு, தீபாவளி அன்றும் நான் ஸ்டாப் ஆக நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி தவிர இந்தி நடிகர் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், ஜெகபதிபாபு, நட்டி நட்ராஜ், ‘கே.ஜி.எஃப்’ அவினாஷ், கே.எஸ்.ரவிகுமார், கோவை சரளா, கருணாஸ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

வசனங்களை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். சிவாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிச்சாமி கேமராவை கவனிக்கிறார். தேவி ஶ்ரீபிரசாத் இசைமைத்து வருகிறார். இதில் நிகழ்கால போர்ஷனும், பீரியட் காலகட்டமும் இருக்கிறது. இதில் பீரியட் போர்ஷன் 70 சதவிகிதம் இருக்கிறது என்கிறார்கள்.
தாய்லாந்தைத் தொடர்ந்து சென்னையில் நடந்து வரும் படப்பிடிப்போடு, ‘கங்குவா’வின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது. சூர்யாவின் போர்ஷன் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே எடுக்கப்பட வேண்டியிருக்கிறது.